‘மலேசியா’ பகுப்புக்கான தொகுப்பு

மலேசிய தேர்தல் முடிவுகள்

மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் எதிர்பாரா திருப்பங்கள் பல நிகழ்ந்துள்ளன.

“மக்கள் சக்தி” என்பதே எங்கும் பேச்சாக இருந்தது. இந்தியர்களிடையே நிலவிய அதிருப்தியை முழுமையாக பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணி, 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்தது.

ஆளுங்கட்சிக் கூட்டணியில் இந்தியர்களின் பிரதிநிதியாக கருதப்பட்ட “ம.இ.கா” பலத்த தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் தலைவர் திரு.சாமிவேலு கூட இந்த எதிர்ப்பு அலையை எதிர்த்து நிற்க இயலவில்லை.

சென்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஆளுங்கட்சிக் கூட்டணி இம்முறை 137 இடங்களை மற்றுமே கைப்பற்ற முடிந்தது. எதிர்க்கட்சிகள் 82 இடங்களைக் கைப்பற்றின. மலேசிய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகள் இவ்வளவு இடங்களைக் கைப்பற்றியது இதுவே முதன்முறையாகும்.

கடந்த வருடம் நடந்த இந்தியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி, ம.இ.கா தலைவர்கள் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, தேர்தலுக்கு முன் முன்னால் பிரதமர் திரு.மகாதிர் அளித்த பரபரப்பு பேட்டி, இவை எல்லாம் இத்தேர்தலில் ஓர் பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது என கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு http://www.malaysiaindru.com/ என்னும் இணையதளத்தைக் காண்க.